வாங்கிய கடனுக்கு வட்டியை கழிக்க வட்டிக்கடைக்காரருகு செக்ஸ் விருந்து: அதை வீடியோ எடுத்து மிரட்டிய பெண் கைது

Date:

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சுகுமார் (42) இவர் பைனான்சிஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் பழனி நேதாஜி நகரை சேர்ந்த துர்க்கை ராஜ் (45).

சுகுமாரிடம் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி ராணி சித்ரா (40) என்பவர் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தார். அவரிடம் பணம் நிறைய இருப்பதை பார்த்து அதனை அபகரிக்க முடிவு செய்தார். அதன்படி அடிக்கடி ராணி சித்ரா தனது வீட்டிற்கு சுகுமாரை வரவழைத்து அங்கு மது குடித்து உல்லாசமாக இருப்பது வழக்கமாம். அந்தவகையில் வாங்கிய கடனுக்கு வட்டியை கழிக்க பைனான்சியருக்கு ராணி சித்ரா செக்ஸ் விருந்து அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக உல்லாசமாக இருந்தனர். இதனை நாரயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை சுகுமாரிடம் காட்டி ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் இந்த வீடியோவை உங்கள் குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார் இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணை நடத்தியதில் ராணி சித்ரா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பணம் கேட்டு மிரட்டியது உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் வர்கள் இதேபோல வேறு சிலரிடம் மது குடிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ராணிசித்ரா நிலக்கோட்டை சிறையிலும், துர்க்கைராஜ், நாராயணசாமி ஆகியோர் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்