Pagetamil
இலங்கை

உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேச்சு!

உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தெடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளதாவது…

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த அதன் தலைவர் சித்தார்த்தன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அதன் பங்காளிக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருடன் மேற்படி விடயம் தொடர்பில் உரையாடியுள்ளோம்.

அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைத்தால் இணைந்து ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.

அதேவேளை வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சிங்கள பௌத்த இனவாத தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றுவதனைத் தடுக்கும் வகையில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.

இதையும் படியுங்கள்

புளொட் நெடுமாறனுக்கு நீதிபதி இளஞ்செழியன் விதித்த மரணதண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Pagetamil

வெள்ளவத்தையில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி மீட்பு!

Pagetamil

வங்கிக் கணக்கு திறக்கவும் TIN அவசியம்!

Pagetamil

கள்ளமண் ஏற்றிய டிப்பரை சுட்டுப்பிடித்த பொலிசார்

Pagetamil

Leave a Comment