மின்சார கட்டணம் உயரும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தாமதமாகும்!

Date:

மின்சார கட்டண திருத்தம்  செய்யப்படும் வரை, சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது தவணை கடன் வெளியீடு தாமதமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று (05) இதை உறுதி செய்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்விற்கு சர்வதேச நாணய நிதிய ஊழியர் மட்ட உடன்பாடு ஏற்கனவே கிடைத்திருந்தாலும், இலங்கைக்கு அடுத்த கடன் தவணையான 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளியிடுவதற்கு நான்காவது மதிப்பாய்விற்கு IMF இன் நிர்வாகக் குழுவின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

அதன்படி, அடுத்த IMF கடன் தவணையை விடுவிப்பதற்கு, செலவு ஈடுகட்டும் மின்சார விலையை மீட்டெடுப்பது ஒரு அத்தியாவசிய நிபந்தனையாகும். அதை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம், சர்வதேச நிதியத்திலிருந்து அடுத்த கடன் தவணையை வழங்குவதையும் தாமதப்படுத்தும்.

இது சர்வதேச நாணய நிதியத்தின் தாமதம் அல்ல, மாறாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் தாமதமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அடுத்த கடன் தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்கும்.

நிதியத்தின் விதிமுறைகளின்படி செலவுகளை ஈடுகட்டும் அடுத்த மின்சார கட்டண திருத்தம் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அரசாங்கம் அறிந்துள்ளது. IMF ஒப்பந்தங்களின்படி, இது கடந்த ஏப்ரல் மாதம் நடக்க திட்டமிடப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்