பேய் விரட்ட சடங்கு செய்ய சென்ற மந்திரவாதி ரூ.38 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மாயம்!

Date:

ஒரு குடும்பத்திற்கு ஏற்பட்ட தீய விளைவுகளை நீக்க சடங்கு செய்ய வேண்டுமென குறிப்பிட்டு, அந்த வீட்டுக்குச் சென்ற ஒரு குழு சடங்கு செய்வதாக நடித்து, ரூ. 3.8 மில்லியன் மதிப்புள்ள நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சிலாபத்தை சேர்ந்த ஒரு சாரதி. அவர் முன்னேஸ்வரம் கோவிலுக்கு அடிக்கடி வரும் ஒரு குறிசொல்லுபவரிடம் தனது பிரச்சினையை சொல்ல, தீய கிரக தாக்கத்தால் அவரது குடும்பத்திற்கு ஏற்படக்கூடிய பேரழிவு குறித்து குறிசொல்லுபவர் அவரை எச்சரித்தார். அதை அகற்ற சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றார்.

சாரதியும் இதற்கு சம்மதிக்க, திட்டமிட்ட நாளொன்றில் சடங்கு செய்ய தீர்மானித்தனர்.

அன்று குறிசொல்லுபவர் அவரது வீட்டிற்கு வந்து சடங்குகளைத் தொடங்கினார். குடும்பத்தினர் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் ஒரு பானையில் போட்டு, ஆசிர்வதிக்க அவரிடம் ஒப்படைக்குமாறு அவர் வீட்டின் உரிமையாளருக்கு அறிவுறுத்தினார். சடங்குகளுக்குப் பிறகு, பேய் விரட்டுபவர் பானையைத் திருப்பிக் கொடுத்து, அதை சன்னதி அறையில் வைக்குமாறும், ஐந்து நாட்களுக்கு அதைத் திறக்க வேண்டாம் என்றும் வீட்டின் உரிமையாளரிடம்  அறிவுறுத்தினார்.

இருப்பினும், பேய் விரட்டுபவர் சென்ற பிறகு, வீட்டின் உரிமையாளர் பானையைத் திறந்தபோது அது காலியாக இருப்பதைக் கண்டார்.

பேய் விரட்டுபவர் ஒரு இந்தியர் என்று சந்தேகிப்பதாக அவர் பொலிசாரிடம் கூறினார். சிலாபம் பொலிசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

இளைஞர் உயிரிழப்பு பட்டாசு வெடித்து

பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர்...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்