30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

மாதகல் கடலில் இளைஞன் பலி

மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று மாதகல் கடற்கரையில் உணவு சமைத்து உண்பதற்காக நேற்று (21) காலை 11 மணியளவில் சென்று, பிற்பகல் 3.15 மணியளவில் கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கோயில் வாசல், காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியைச் சேர்ந்த பிரேமானந்த் சாருஜன் எனும் 20 வயதான இளைஞர், கடலில் குளிக்க முயன்றபோது கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டார்.

பின்னர், பொதுமக்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மாலை 5.30 மணியளவில் அவரது உடல் மீட்கப்பட்டது.

உயிரிழந்த இளைஞனின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்படவுள்ள நிலையில், இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment