முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதான இளம் குடும்பப் பெண் அகிலன் தனுஷியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (24) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 6 மாத குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அந்த நேரத்தில், வீதியில் திடீரென குறுக்கே வந்த குரங்கு மோட்டார் சைக்கிளுடன் மோதியதினால், தாய் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாய் பலத்த காயங்களுடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.