29.9 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

குரங்கு மோதி விபத்தில் இளம் தாய் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதான இளம் குடும்பப் பெண் அகிலன் தனுஷியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (24) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 6 மாத குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அந்த நேரத்தில், வீதியில் திடீரென குறுக்கே வந்த குரங்கு மோட்டார் சைக்கிளுடன் மோதியதினால், தாய் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த தாய் பலத்த காயங்களுடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!