உழவு இயந்திர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Date:

நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற பரிதாபகரமான விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (24) இரவு, நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதவடி பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்