யாழ்ப்பாணத்தில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த சிறுவனின் வியாபாரத்தை, யாழ் மாநகர சபையின் வரி அறவீட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீதியோரத்தில் அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்யப்படுவதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுத்ததாக மாநகர சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக வீதியோரத்தில் உள்ள கடையை அகற்றுமாறு தெரிவித்திருந்தும், அதற்கான நடவடிக்கை ஏதும் சிறுவனால் மேற்கொள்ளப்படாமையால் குறித்த கடையை அகற்றியதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த அதிகாரி தன்னிடம் தினமும் பழங்களை இலஞ்சமாக பெற்றதுடன், தற்போது தனது வியாபாரத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




