மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Date:

மத்திய மலைநாட்டில் எந்த நேரத்திலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார், வன பாதுகாப்பு, வனவிலங்கு துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டில் நிலவும் அதிக வெயில் மற்றும் வறண்ட வானிலையின் காரணமாக, காட்டுத் தீ ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.

காடுகளில் விழும் வலுவான சூரிய ஒளி காரணமாக, அந்தக் காடுகளில் உள்ள தாவரங்கள் வெயிலால் எரிந்து எந்த நேரத்திலும் தீப்பிடிக்கும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள சில இயற்கை காடுகளில் இந்த அபாயம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக, கண்டியின் மாத்தளை மாவட்டம் மற்றும் நுவரெலியாவின் ஹோட்டன்தன்ன ஆகிய பகுதிகள் அதிக ஆபத்தில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில், இந்த பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்ட தகவல்கள் வந்துள்ளன. அதற்கமைய, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருந்து, தீப்பிடிக்கும் அபாயத்தை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேயின் மனைவியின் நாடகங்கள் தொடர்கின்றன!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவைத்...

கள்ளமண்காரரை காப்பாற்ற முயன்ற 14 பேர் கைது!

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய...

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இன்று (21)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்