டெல்லியில் இன்று (17) அதிகாலை 5:36 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி டெல்லிக்கு அருகிலிருந்ததுடன், 5 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் குடியிருப்பு பகுதிகளில் உணரக்கூடிய அளவில் இருந்ததாகவும், அதிர்வின் காரணமாக மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்திற்கான மேலதிக ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1