தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுமி மாயமாகியுள்ள துயரச் சம்பவம் மாட்டுவாகலை பகுதியில் பதிவாகியுள்ளது.
இரத்தினபுரி, மாட்டுவாகலை கீழ்பிரிவை சேர்ந்த 15 வயதுடைய அன்டனி தில்ருக்ஷி என்ற சிறுமியே நேற்றைய தினம் (16) காலை 9 மணியளவில் வீட்டிலிருந்து எஹெலியகொட பகுதிக்கு தனியார் வகுப்பிற்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
சிறுமியின் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலையும் பெற முடியாததால், உடனடியாக இரத்தினபுரி கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
சிறுமி தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📞 0776555038 | 0766406560 | 0774631215



