இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BUNG TOMO – 357’ என்ற போர்க்கப்பல், சிநேகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினரால், கடற்படை மரபுகளுக்கு ஏற்ப குறித்த போர்க்கப்பலை வரவேற்கப்பட்டுள்ளதாக Multirole Light Frigate வகையைச் சேர்ந்த ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமுடையது மற்றும் மொத்தம் 111 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகிறார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்தோனேசிய கடற்படை வீரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நட்புறவுக் விஜயத்திற்குப் பின்னர், ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பல் இன்று இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.



