இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுக்கு 10000 பேர் இறப்பு

Date:

இலங்கையில் சிறுநீரக நோய்களால் ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் உயிரிழப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறுமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற காரணிகளினால் இவ்வாறு மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, பதுளை, மொனராகலை, பொலனறுவை, அனுராதபுரம், குருணாகல் போன்ற மாவட்டங்களில் அதிகளவான சிறுநீரக நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையை கட்டுப்படுத்த மேலும் பல சிறுநீரக சிகிச்சை நிலையங்களை உருவாக்குவதற்கும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அதிகளவில் உதவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்