பொது பஸ் நிலையமொன்றில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Date:

கதிர்காமம் பொது பஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (14) இரவு, பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கழிப்பறை பகுதியில், குறித்த இளைஞர் தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்றும் அவர் பல நாட்களாக கதிர்காம நகரத்தில் சுற்றித் திரிந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன், கதிர்காமம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தற்கொலைக்கான காரணம் தொடர்பில் இதுவரை உறுதியாக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், குறித்த இளைஞரின் அடையாளம் மற்றும் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்