உதவி செய்ய முயன்ற சாரதிக்கு நிகழ்ந்த அநியாயம்

Date:

தனியார் வாகன சாரதியை கடுமையாக தாக்கி அவரது வாகனத்தை களவாடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ எனும் இடத்தில் வழியில் நின்றிருந்த நால்வர் குறித்த வாகனத்தை மறித்து ஏறி பயணம் செய்த வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறிய நால்வரினால் குறித்த வாகன சாரதி இறக்குமளவிற்கு தாக்கப்பட்டதோடு, அவரது வாகனம் களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காட்டு வழிகளிற்குள்ளோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களூடாகவோ பயணம் செய்கையில் இவ்வாறான செயல்களை கொள்ளையர்கள் செய்கின்றனர்.

ஆகவே தனியார் வாகனகளை வைத்திருக்கும் ஓட்டுனர்கள் தாம் வழமையாக பயணம் செய்யும் வழி தவிர்த்து தெரியாத வழிகளில் பயணம் செய்வதை இயன்றளவு தவிர்க்கவும் என எச்சரிக்கப்டுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்