29.6 C
Jaffna
March 15, 2025
Pagetamil
கிழக்கு

பாலத்தை உடைத்து கார் விபத்து – மூவர் காயம்

வெல்லாவெளியில் பாலம் உடைந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நீரோடை ஒன்றில் வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று (13) மாலை 5:45 மணியளவில் வேக கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார், பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து நீரோடையில் கவிழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூதூர் இரட்டைக் கொலை: 15 வயது சிறுமி கைது!

Pagetamil

இரு பெண்கள் வெட்டுக்காயத்துடன் சடலங்களாக மீட்பு!

Pagetamil

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி உறுப்பினர் போர்க்கொடி

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

Leave a Comment