வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

Date:

மாத்தளை கடுவெல, போமிரிய பகுதியில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில், நேற்று (11) பிற்பகல், கெடட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவ மாணவிகள் மீது வெளியாட்கள் குழு ஒன்று பலவந்தமாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்து நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையின் அதிபர், இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர், சில நாட்களுக்கு முன்பும் சில பாடசாலை குழந்தைகளை தாக்கியதாகவும், நேற்றும் மேலும் சிலருடன் வந்து பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் பழைய மாணவருடன் பாடசாலைக்குள் நுழைந்த வெளியாட்கள் இவ்வாறு மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

சிறுவர்களைத் தாக்கும் போது அவர்களைக் காப்பாற்றச் சென்ற மாணவிகளையும் பூந்தொட்டிகள், விளக்குமாறு, துடைப்பம் போன்ற பொருட்களால் தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த நாட்களிலும் வவுனியாவில் அமைந்துள்ள பாடசாலையிலும் இது போன்று வெளியாட்கள் உள்நுழைந்து மாணவர் ஒருவரை தாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஒரே வங்கிக்கணக்கிலிருந்து முஸ்லிம், சிங்கள அடிப்படைவாதிகளுக்கு சம்பளம்: ராஜபக்சக்களின் திருகுதாளங்களை அம்பலப்படுத்திய அனுர!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

யாழ் வந்த பிக்குகள் சொன்னதென்ன?

யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை...

வல்வெட்டித்துறையில் குளிக்கச் சென்ற சிறுவன் பலி

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்