பாழையவாடியில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுமி பலி

Date:

பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (7) பதிவாகியுள்ளது.

வவுனியா, பாழையவாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறுதலாக நீர் இறைக்கும் மோட்டாரின் மீது விழுந்துள்ளார். இதன்போது, அதில் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியின் மூலம் மின்சாரம் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்