ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பயணித்த நால்வரும் காயமடைந்து, முதலில் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்