ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

Date:

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் தலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பயணித்த நால்வரும் காயமடைந்து, முதலில் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்