24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் பிணை விண்ணப்பித்ததை தொடர்ந்து, வைத்தியர் இனி பிணை நிபந்தனைகளை மீற மாட்டார் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில், இரண்டு ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைய தினம் (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment