சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் பிணை விண்ணப்பித்ததை தொடர்ந்து, வைத்தியர் இனி பிணை நிபந்தனைகளை மீற மாட்டார் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில், இரண்டு ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைய தினம் (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.




