வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

Date:

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் மூலம் மீண்டும் பிணை விண்ணப்பித்ததை தொடர்ந்து, வைத்தியர் இனி பிணை நிபந்தனைகளை மீற மாட்டார் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில், இரண்டு ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைய தினம் (வியாழக்கிழமை) நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞன் மடக்கி பிடிப்பு

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக,...

அம்பாறையில் பொலிஸாரின் அதிரடி வேட்டை ஹெரோயினுடன் சிக்கிய 7 போதைப்பொருள் வியாபாரிகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்