வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

Date:

யாழ்ப்பாணம் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடு, இலங்கை உயர் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (06) உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவர் அடங்கிய நீதிமன்ற குழுவின் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது, அரசின் சார்பில் ஆஜரான சட்டமா அதிபரின் பிரதிநிதி, மேல்முறையீட்டை விசாரிக்க தேவையான தேதியை அறிவிக்குமாறு கோரியதையடுத்து, எதிர்வரும் ஓகஸ்ட் 25ம் திகதி விசாரணை நடைபெறுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, மாணவி வித்தியாவைக் கடத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேருக்கு யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

மேன்முறையீடு செய்த குற்றவாளிகள், இந்த தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்றும், தங்களுக்குச் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்