இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் காயம்

Date:

மின்னேரிய வீதியின் 7வது மைல்கல் பகுதியில் இன்று (29) காலை 11 மணியளவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துமே குறித்த விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது மருத்துவமனை மற்றும் ஹபரணை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்து, கட்டுநாயக்காவில் இருந்து சிறிபுர பகுதியில் உள்ள மரண வீடொன்றுக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

வடக்கில் நிரந்தர நியமனம் கோரும் வெலிஓயா சிங்கள தொண்டர் ஆசிரியர்கள்

முல்லைத்தீவு, வெலிஓயா பிரதேச சிங்கள மொழிப் பாடசாலைகளில் நீண்ட காலமாகத் தொண்டர்...

இனியபாரதி பயங்கரவாத தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனித...

பாதாள உலகத்துடன் தொடர்பா?: டிஐஜி வருண ஜெயசுந்தரவிடம் விசாரணை!

இந்தோனேசியாவிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரரான ‘கெஹெல்பத்தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்