கனடா விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்

Date:

யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும் இவர், கடந்த 13ம் திகதி கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

நேற்று (25.01.2025) நள்ளிரவு, பல்கலைக்கழக விரிவுரையாளருடன் ஜூம் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பதிவாளர் வீதியில் அவரது சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இவர் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் பசுமை இயக்கத்தின் தலைவருமான ஐங்கரநேசனின் தம்பி ஆவார்.

இந்த திடீர் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்