23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

தெங்கு அபிவிருத்தி சபையின் புதிய கொள்கை

நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபையிடமிருந்து கட்டாய அனுமதி பெற வேண்டும் என புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் எடுக்கப்பட்டதாக பணிப்பாளர் சபையின் ஆலோசகர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு ஏக்கருக்கு மேல் தென்னை மரங்கள் பயிரிடப்பட்ட நிலங்களை ஏலம் விடுவது அல்லது பிரிப்பது தடைசெய்யப்பட்டதுடன், விவசாய நிலங்களை வேறு திட்டங்களுக்காக பயன்படுத்த நினைத்தால், தென்னை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் அல்லது தொடர்புடைய அரசாங்க அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வுக்குப் பின்னர் அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் 10 ஏக்கருக்கு குறைவான காணிகளை ஏலம் விட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய விதிமுறைகளின்படி அந்த அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன, மேலும் எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்ட திருத்தங்களாக முன்வைக்க தெங்கு அபிவிருத்தி சபை தயாராகி வருகின்றது.

இந்த நடவடிக்கைகள் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலப்பயிர் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உதவும் வகையில் அமைந்துள்ளதாகவும், இது தேங்காய் தட்டுப்பாட்டை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment