அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

Date:

அனர்த்தங்களால் உயிரிழப்புகள் ஏற்படும் சூழல்களில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2,50,000 இலிருந்து ரூ. 1 மில்லியன் வரை அதிகரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இந்த தீர்மானம் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்டது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படுவோருக்கு உதவிகளை வழங்க வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட தயாராக உள்ளன. இதேவேளை, மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படையினர், காவல்துறை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட அமைப்புகள் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்காக 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் உணவுக்காக தினசரி ஒருவருக்கு ரூ. 1,800 முதல் குடும்ப அளவைப் பொறுத்து நிதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹிரு தொலைக்காட்சிக்கு எதிராக அமைச்சர் லால் காந்த முறைப்பாடு

அமைச்சர் கே.டி. லால் காந்த, தனது சொத்துக்கள் குறித்த அறிவிப்பு தொடர்பாக...

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவை பதவிவிலக உத்தரவிட்ட ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட்டின் நீண்டகால தலைவர் ஷம்மி...

யாழ் விபத்தில் தந்தை, மகன் பலி

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்