மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சோகமிக்க ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் புஷ்பக் ரயிலின் பயணிகளுக்கிடையில் அதிர்ச்சியையும் பெருந் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பக் ரயிலில் ஃபயர் அலாரம் (Fire Alarm) ஒலித்ததால், பயணிகள் தங்கள் பாதுகாப்புக்காக அவசரமாக ரயிலில் இருந்து வெளியேற முயன்றனர். இதே சமயத்தில், எதிர்திசையில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகளின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியது.
இதன்போது, 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஃபயர் அலாரம் தவறாக செயல்பட்டதா, அல்லது உண்மையில் தீ விபத்து ஏற்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.



