யாழில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, முதலில் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், காய்ச்சல் குணமாகாமல் நிலைமை மேலும் மோசமடைந்ததால், கடந்த திங்கட்கிழமை (20) சிறுமி புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அதற்கும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனை மூலம், சிறுமி நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புங்குடுதீவு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இழப்பாகவே விளங்குகின்றது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்