யாழில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

Date:

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 06ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, முதலில் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், காய்ச்சல் குணமாகாமல் நிலைமை மேலும் மோசமடைந்ததால், கடந்த திங்கட்கிழமை (20) சிறுமி புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வைத்தியர்கள் சிறுமியை பரிசோதித்தபோது, அதற்கும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

உடற்கூற்று பரிசோதனை மூலம், சிறுமி நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புங்குடுதீவு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இழப்பாகவே விளங்குகின்றது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணைத் தளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற...

குடும்பிமலையில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு குடும்பிமலை வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரு...

வந்தாறுமூலையில் விபத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்