இலங்கை இராணுவ முகாமில் இருந்து காணாமல் போயிருந்த 73 T56 ரக துப்பாக்கிகள் பாதாள உலகக் குழுக்களிடம் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், காணாமல் போன ஆயுதங்களில் 38 துப்பாக்கிகள் அதிகாரிகளால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ஆயுதங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பு கருதி மீதமுள்ள ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




