அம்பாறையில் கரை ஒதுங்கிய உயிரிழந்த கடலாமைகள்

Date:

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை – பாண்டிருப்பு கடற்கரையில் இன்று (20) இரண்டு பெரிய கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் காலை நேரம் சென்ற கடற்றொழிலாளர்கள், சுமார் 3 அடி நீளமும் 25 முதல் 50 கிலோ எடையுள்ள இரண்டு கடலாமைகளை உயிரிழந்த நிலையில் கண்டுள்ளனர். ஆழ்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கியிருக்கலாம் என கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கிய ஆமைகள் ஒலிவ் வகையைச் சேர்ந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த வாரம் பெரிய நீலாவணை பகுதியிலும் ஒரு பெரிய கடலாமை இறந்த நிலையில் கரையொதுங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளின் தகவல் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் கடல்சுற்றுச்சூழல் குறித்த விசாரணைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்