லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, 2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் தொடர்பாக நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. உலகளாவிய ஊடகங்கள் இதுகுறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
காட்டுத்தீ காரணமாக ஒஸ்கர் விருது விழாவை ரத்து செய்யவேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், விருது வழங்கும் விழா நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
முன்னதாக, விருதுகளுக்கான வேட்புமனு அறிவிப்பு நேற்றைய தினம் (18) வெளியிடப்படவிருந்த நிலையில், அதனை ஜனவரி 23 வரை ஒத்திவைக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
97வது அகடமி விருதுகள் அல்லது ஒஸ்கார் விருதுகள் வரும் மார்ச் மாதம் 2ம் திகதி அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து, விழா ரத்து செய்யப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.




