அம்பாறை மஹாஓயா வீதி, தற்போதைய நிலவரப்படி, முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முதல் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியானது நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.
இப் பகுதியில் ஏற்பட்ட வெல்ல அனர்த்தம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இவ்வீதியில் போக்குவரத்திலீடுபடும் வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துவது அவசியமாகும் எனவும், வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




