மூதூர் இருதயபுரம் பகுதியில் இன்று சற்று முன்னர் சிறிய ரக கார் வாகனம் வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கான முதன்மை காரணம் சாரதியின் அதிவேகம்தான் என அருகில் இருந்தவர்கள் தெரிவித்திருந்தாலும், விபத்துக்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பொலிஸார் சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





