24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் – ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் இடமாற்றங்கள் எந்தவித அரசியல் தலையீட்டும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டுமென ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் தலையீடுகள் மற்றும் அவற்றின் அடிப்படையில் இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்ட சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ஒரே பாடசாலையில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சிலருக்கு இதுவரை இடமாற்ற அறிவிப்பு வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

சில ஆசிரியர்கள் ஒரே பாடசாலையில் நீண்ட காலம் பணியாற்ற முயற்சிக்கின்றனர், இதனால் தூரப் பகுதிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், சிலர் அதே பாடசாலைகளில் தம் பணியை தொடர முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, 40 முதல் 50 வயதுடைய ஆசிரியர்கள் தூரப் பகுதிகளில் சேவையாற்ற வேண்டும் எனவும், இது கல்வி சமநிலையை நிலைநிறுத்த உதவும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

கடந்த அரசியல் தலையீட்டின் விளைவாக ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட வேண்டும் எனவும், இதன் மூலம் கல்வி தரத்தை மேம்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

இடமாற்றங்கள் சாதுர்யமாக நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாணவர்களும் சமமான கல்வி வசதிகளை பெறுவார்கள் என ஜோசப் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment