24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பயிர் சேதத்திற்கு மாத இறுதியில் இழப்பீடு

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு, இந்த மாத இறுதிக்குள் விவசாயிகளுக்குக் கிடைக்கும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.

பயிர் சேத மதிப்பீடுகள் தற்போது 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜாசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற பகுதிகளில் சேதமடைந்த பயிர்களுக்கான மதிப்பீடு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விவசாயிகள் இறுதி இழப்பீட்டு ஆவணங்களை வழங்கியவுடன், நிதி விரைவில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இடப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், விவசாயிகள் இழப்பீடு பெறுவதற்கான அனைத்துப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதாகவும், அந்தத் தொகையை விரைவில் வங்கி கணக்குகளுக்கு மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment