லொஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிறைக்கைதிகள் பங்கேற்பு

Date:

லொஸ் ஏஞ்சலில் பரவியுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் பெண்களும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவிய காட்டுத்தீயை அணைக்கும் நடவடிக்கையில் சிறைக்கைதிகள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பு தீயணைப்பு படையினருக்கு வலுவாக அமைகின்றது.

தீவிபத்தில் இதுவரை 37,000 ஏக்கர் நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளதோடு, தீ காரணமாக 16 பேர் உயிரிழந்ததாகவும், 10,000க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்கள் சிதைவடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காடுகளில் பரவி வரும் தீவை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுடன் சிறைக்கைதிகளின் பங்களிப்பும் உழைப்பும் பாராட்டத்தக்கது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

காட்டுத்தீயின் தாக்கத்தால் லொஸ் ஏஞ்சல் பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதால், அவசர உதவி நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்