குடு சலிந்து பிணையில் விடுதலை!

Date:

பிரபல போதைப்பொருள் கடத்தல் குழு தலைவரும் பாதாள உலக தலைவருமான ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷித குணரத்னவுக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த குணரத்ன, மார்ச் 2023 இல் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான’ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவுடன், இவர் மார்ச் 1, 2023 அன்று இன்ரப்போல், மடகாஸ்கர் சட்ட அமலாக்க மற்றும் சுங்க அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மற்ற ஆறு சந்தேக நபர்களுடன் மடகாஸ்கர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இருவரும் பின்னர் மார்ச் 15 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

‘குடு சலிந்து’ பாணந்துறை பிரதான நீதவான் சமன் குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​அவருக்கு தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் பிணை வழங்கப்பட்டது. கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இந்த வழக்கு பிப்ரவரி 10, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்