27.6 C
Jaffna
March 2, 2025
Pagetamil
குற்றம்

ரிக்ரொக் காதலனை நம்பி சீரழிந்த பாடசாலை மாணவி

அநுராதபுரம் அலையபட்டுவ பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலையொன்றில் ஒன்பதாம் தரத்தில் படிக்கும் இந்த சிறுமி பாடசலைக்கு வரவில்லை. அவர் அடுத்த நாள் பாடசாலைக்கு ஒரு இளைஞருடன் சென்றார். அதிபரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

‘டிக் டொக்’ சமூக ஊடகத்தால் அடையாளம் காணப்பட்ட இளைஞனுடன் சிறுமி வைத்திருந்த காதல் உறவின் அடிப்படையில் சந்தேகிக்கப்படும் காதலருக்கு சிறுமி நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அப்போது காதலன் அந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என சிறுமியை மிரட்டி, குருநாகல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு வந்துராகல பிரதேசத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸ் குழுவொன்று மேற்கொண்டு வருகின்றது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து காவல்நிலையத்திற்கு வந்து புகார் தெரிவிக்க தயங்குபவர்கள், தேசிய குழந்தைகள் நல ஆணைக்குழுவால் இயக்கப்படும் 24 மணி நேர கட்டணமில்லா அவசர இலக்கமான ‘1929’க்கு அழைக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!