தொடர் மழை… பல பகுதிகளில் நீரில் மூழ்கின!

Date:

நாட்டை பாதிக்கும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழையாக 175.5 மில்லி மீற்றர் அவிசாவளை எல்ஸ்டன் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இன்று (12) காலை 9.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், களனி கங்கை நாகலகம் தெரு மற்றும் ஹங்வெல்ல பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, களனிமுல்ல, அம்பத்தளை, கல்வான, மல்வான ஆகிய நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கடுவெல மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கடுவெல இடமாற்றப் பகுதிகளில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

களனி கங்கையின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ள நிலையில், ஹங்வெல்ல நீர்மானியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. 8.8 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மெஹகம, கொடபரகொடெல்ல, சிவலிவத்த, ஜயவீரகொட, வலவ்வத்த, வனஹகொட, எரியகொல்ல போன்ற பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த மக்களும் இடம்பெயர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தவிர களு கங்கை மில்லகந்த பிரதேசத்திலும், பத்தேகம பகுதியில் கிங் கங்கையிலும் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. களுத்துறை – பண்டாரகம பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

புலத்சிங்கள மற்றும் பரகொட பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இவ்வருடம் 17வது தடவையாக வெள்ளத்தினால் தமது பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குகுலே கங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினால் தாம் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...

இங்கினியாகலையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது : அம்பாறை பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பிரதான விநியோகஸ்தரும் சிக்கினார்

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிக்கும் நோக்கில் அம்பாறை பிரதி பொலிஸ்மா...

நிந்தவூரில் வாழ்வாதார மேம்பாட்டு தேவையுடைய குடும்பங்களுக்கு தையல் மெஷின் வழங்கும் நிகழ்வு

நிந்தவூரில் இயங்கிவரும் Best of Young சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்