கூரையை சீர் செய்தவர் தவறி விழுந்து பலி

Date:

நேற்று (03) பிற்பகல் பசறை மத்திகஹதென்ன விவசாய சேவை அலுவலகத்தின் மேற்கூரையை சீர் செய்து கொண்டிருந்த ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 02, தவலம்பலாஸ்ஸ, வெபெத்த என்ற இடத்தில் வசிக்கும் 34 வயதுடைய டி.தேவேந்திர ராஜ் என்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், பிற்பகல் 2 மணியளவில் அலுவலகத்தின் மேற்கூரையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதன்படி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்