Pagetamil
முக்கியச் செய்திகள்

அரியத்துக்கு ஒரு குத்து… ரணிலுக்கு ஒரு குத்து: ரணிலை இரகசியமாக சந்தித்த மாமியாரும், மருமகனும்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் உள்ளிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் குழுவொன்று நேற்று (7) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினர்.

இரவு 9.15 மணிவரை யாழ்ப்பாணம் நகரிலுள்ள நட்சத்திர ஹொட்டலில் இந்த சந்திப்பு நடந்தது.

சந்திப்பு குறித்து கலையமுதன் தரப்பினரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, அதனை உறுதி செய்தனர். சாவகச்சேரியை தனியான பிரதேச செயலக பிரிவாக பிரிப்பது தொடர்பான கோரிக்கை மனு சமர்ப்பித்ததாக தெரிவித்தனர்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன், அவரது மாமியாரும், முன்னாள் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சசிகலா ரவிராஜ், புதிய சுதந்திரன் பத்திரிகையை நடத்தும் மு.அகிலன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் சுதர்சன், மயூரன் மற்றும் குணாளன் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நேற்று மாலை வரை தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து துண்டுப்பிரசுரம் வழங்கும் பணியில் கலையமுதன் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை’: ஏற்றுக்கொண்டார் ரணில்!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

Leave a Comment