சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சித்திரவதையா?: நடந்தது என்ன?

Date:

சுன்னாகம் பொலிசாரால் தனது கணவன் இரவு நேரம் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக பெண்ணொருவர் குற்றம்சாட்டியிருந்தார்.

யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்று (2) பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.

எனினும், இந்த குற்றச்சாட்டை பொலிஸ் வட்டாரங்கள் மறுத்துள்ளன.

சுன்னாகம் பிரதேசத்தில் அண்மையில் நடந்த குற்றச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்திலேயே அந்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

வீதியால் சென்ற இரண்டு நபர்களை வழிமறித்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது, ஒருவரின் 3 விரல்களும் துண்டாடப்பட்டுள்ளன.

தாக்குதலை நடத்திய குழுவில் இருந்தவர்களின் விபரங்களை பாதிக்கப்பட்டவர்கள் வழங்கியதன் அடிப்படையில், குறிப்பிட்ட நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியலில் வைத்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்