ஹமாஸின் அரசியல் பணியகத் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரானின் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையில் வெடிகுண்டு சாதனத்தைப் பயன்படுத்தி படுகொலை செய்யப்பட்டார் என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு ஈரானியர்கள் உட்பட ஏழு மத்திய கிழக்கு அதிகாரிகள் மற்றும் ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, இந்த வெடிகுண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு விருந்தினர் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டது. விருந்தினர் மாளிகையில் உள்ள அறையில் ஹனியே இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து ரிமோட் மூலம் வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் ஹனியேவின் மெய்க்காப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
இந்த குண்டுவெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும், கட்டிடத்தை குலுக்கியதாகவும், சில ஜன்னல்கள் உடைந்து வெளிப்புற சுவர் பகுதி இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்தினர் மாளிகை இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இது ஈரானின் ஒரு பெரிய உளவுத்துறை தோல்வியக வர்ணிக்கப்படுகிறது.
தாக்குதல் குறித்து அமெரிக்காவிடம் இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் அங்கீகரிக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியானின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹனியே ஈரானிய தலைநகருக்கு வந்திருந்தார்.
ஈரானிய அதிகாரிகள் மற்றும் ஹமாஸ் இருவரும் புதன்கிழமை (ஜூலை 31) படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு என்று கூறினர். ஹமாஸ் ஒரு அறிக்கையில், அதன் தலைவர் “தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு துரோக சியோனிஸ்ட் தாக்குதலில்” கொல்லப்பட்டதாகக் கூறியது.
இதுவரை, இஸ்ரேல் ஈரான் அல்லது ஹமாஸ் படுகொலை பற்றிய கூற்றுக்களை ஒப்புக்கொள்ளவில்லை அல்லது நிராகரிக்கவில்லை. எவ்வாறாயினும், நியூயோர்க் போஸ்ட் அறிக்கையின்படி, இஸ்ரேல் அமெரிக்காவிற்கும் மற்ற மேற்கத்திய அரசாங்கங்களுக்கும் உடனடியாக நடவடிக்கையின் விவரங்களைத் தெரிவித்ததாகக் கூறியது.
ஹனியே 2017 இல் ஹமாஸ் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பித்து துருக்கிக்கும் கத்தாரின் தலைநகர் தோஹாவுக்கும் இடையில் சென்றார்.



