கட்சியின் தீர்மானம் எதுவாயினும் நானும், அப்பாவும் ரணில் பக்கம்தான்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் தானும் தனது தந்தை ஜனக பண்டார தென்னகோனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்போம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை மாத்திரமல்ல பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பெரும்பான்மையானவர்கள் இன்று ஜனாதிபதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாடு எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்த போது எவரும் முன்வராத பின்னணியில் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வித தயக்கமுமின்றி நாட்டைப் பொறுப்பேற்று பாடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தானும் தனது தந்தையும் தீர்மானித்தோம் என தென்னகோன் தெரிவித்தார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவினால் நேற்று எடுக்கப்பட்ட முடிவு, களத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அறிவொளியற்ற தீர்மானம் எனத் தெரிவித்த பிரமித பண்டார தென்னகோன், அந்த முட்டாள்தனமான முடிவின் விளைவுகளை நாடு விரைவில் காணும் என்றும் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தீயை கட்டுப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தானும் தனது தந்தையும் மாத்தளை மக்களிடம் சென்று அதிகபட்ச ஆதரவை வழங்க ஏற்பாடு செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி...

பேராசிரியர் ரகுராம் வழக்கில் இடைக்கால கட்டளை நீடிப்பு

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு எதிராக...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்கால தடைவிதித்தது நீதிமன்றம்

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையின் செயற்பாடுகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்