நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என தாக்கல் செய்யப்பட்ட ஆரம்ப மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
அதன் தீர்ப்பை இன்று (25) காலவரையின்றி ஒத்திவைத்தது.
இந்த மனுவை சட்டத்தரணி பி.பி.எஸ்.எம். பத்திரத்ன தாக்கல் செய்ததுடன், உண்மைகளை சரிபார்ப்பதற்காக இந்த மனு கோரப்பட்டபோது, பிரதம நீதியரசர் தவிர்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவோ அல்லது முன்மொழியவோ ஜனாதிபதிக்கு தடை விதிக்கும் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
அன்றைய தினம், ஜனாதிபதியினால் உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நீதிபதியின் நியமனத்தை பின்பற்றாமல் நிராகரித்ததன் மூலம் அரசியலமைப்பின் 12 (1) வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமை மீறல் நடந்துள்ளதா என்பதை விசாரிக்கும் மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானிததிருந்தது.
அதன்படி, இந்த மனு மீதான விசாரணையை இன்று முடித்த உயர் நீதிமன்றம், தீர்ப்பை வெளியிடுவதை காலவரையின்றி ஒத்திவைத்தது.
சட்டமா அதிபர், சபாநாயகர், பிரதமர், அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திருமதி கனிஷ்க டி சில்வா ஆஜரானார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித், நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசிம் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜரானார்.



