எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

Date:

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளிமேடு பிரதேசத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் வயல் பிரதேசத்தில் காணப்படுவதை கண்ட பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து குறித்த சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை அன்புவளிப்புரம் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தம்பலகாமம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட (வயது-53) நபர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ் –

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்