இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வெளியிட வேண்டாம் என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (18) அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கேட்டபோது, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், அந்த அச்சத்தைப் போக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்றார்.
இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தத்தை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் அண்மையில் குற்றம் சுமத்தியுள்ளன.




