11 வருடங்களுக்கு முன்னர் லுணுகம்வெஹர பொலிஸில் கடமையாற்றிய போது பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக ஒப்புக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா நான்கு வருட கடுங்காவல் தண்டனையும் ஐந்து வருட பணி இடைநிறுத்தமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இலஞ்சம் கேட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட குற்றம்சாட்டப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த அபராதத் தொகையைச் செலுத்தாவிட்டால் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.
மேலும், இலஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 29ன் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு வாக்களிப்பது உட்பட சிவில் உரிமைகளை இடைநிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க, வழக்கின் முடிவை உடனடியாக தேர்தல் ஆணையருக்கு அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் மற்றைய பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் தற்போது உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.




