ஜெனரேட்டரை இயக்கிவிட்டு உறங்கிய தந்தையும், மகனும் பலி

Date:

ஜெனரேட்டரை இயக்கிவிட்டு இன்று (23) அதிகாலை உறங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புபுரஸ்ஸ நெஸ்டா பகுதியில் வசித்து வந்த 40 வயதுடைய தந்தையும் அவருடைய 17 வயதான மகனுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் வெசாக் கொண்டாட்டத்திற்காக புபுரஸ்ஸ நகரில் அன்னதானத்தை வழங்க தயாராகி கொண்டிருந்தனர்.

நேற்று (22) அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக அறையில் இருந்த ஜெனரேட்டரை இயக்கிவிட்டு இருவரும் உறங்கச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இருவரும் எழுந்திருக்காததால், அன்னதானத்தினை ஏற்பாடு செய்ய வந்த குழுவினர் இது குறித்து புபுரஸ்ஸ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட சோதனையில் மகன் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கம்பளை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டதன் பின்னர் கம்பளை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காந்தி பெர்னாண்டோ சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

பின்னர் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய வாயுவை சுவாசித்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சாவகச்சேரி உபதவிசாளர் விவகாரம்: இடைக்கால கட்டளைக்கு நீதிதன்றம் மறுப்பு

சாவகச்சேரி நகராட்சி மன்றம் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை...

நீர்கொழும்பு சிறைக்கைதிகள் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள...

நீர்கொழும்பு சிறை விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்