இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு விளக்கமறியல்

Date:

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்களை 7 பேரை ஜூன் 3 வரை சென்னை புழல் சிறையில் அடைக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் கடந்த சனிக்கிழமையன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை படகு ஒன்றை சிறைபிடித்தனர். அதிலிருந்த இலங்கை மீனவர்கள் 7 பேரையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து, படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை ஞாயிறன்று தூத்துக்குடி அழைத்து வந்து தருவைகுளம் மெரைன் போலீஸில் ஒப்படைத்தனர்.

அவர்கள் மீது போலீஸார் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அங்கு மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணைக்குப் பின் அவர்கள் இன்று (மே 20) ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் (பொறுப்பு) ராஜா குமார், இலங்கை மீனவர்கள் 7 பேரையும் வரும் ஜூன் 3ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் இலங்கை மீனவர்களை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்